
அன்புள்ள கடன் அட்டைதாரர்களே(Credit Card)!
வணக்கம்!!!
இங்கு எனது நண்பரின் கடன் அட்டையின் பயன்பாட்டு அனுபவங்களை கூற விழைகிறேன். ஏனெனில் அதை இவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டாம் என்பதற்காக....
கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரு வங்கிமூலம் கடன அட்டை பெற்றார், அதனைப் பெற்ற அடுத்த ஓரிரு நாட்களில் கடன்தொகை முழுமையும் காலியாகும் அளவிற்கு அந்த முழுமதிப்பில் ஒரு மொபைல் தொலைபேசியும் வாங்கினார். மாதச் சந்தாவில் கட்டும்படி அதனை மாற்றி அமைத்தும் கொண்டு, பிறகு மூன்று மாதங்கள் தொடர்ந்து சந்தா கட்டத் தொடங்கினார். சந்தா கட்டக் கட்ட அவரின் கடன் குறைந்து தொகையின் அளவு மீண்டு கொண்டு இருந்தது. அந்தச் சமயத்தில், அவர் வேலை இழக்க நேரிட்டது அதனால் அவர் வேறு ஊருக்கு இடம் பெயர்ந்து வேலைதேடிக்கொண்டு இருந்ததால் அடுத்த மூன்று மாத சந்தாக் கட்டமுடியாத நிலை ஏற்பட்டது. மூன்று மாத சந்தாக்களை கட்டியதால் அட்டையில் கொஞ்சம் இருப்பு சேர்ந்தது.
அவரின் செலவுக்கான பணத்தைப் பெற, நண்பர் ஒருவரின் மாத மொபல் பில்லை இவரது அட்டையின் மூலம் கட்டி, அவரிடம் பணம் பெற்று வந்தார் இதனால் மீண்டும் அட்டையின் வரம்பு காலியாகி சந்தாக் காலமும் முடிந்து, அவரது அட்டையின் வரம்பை மீறியது. அவரது இருப்பு மைனஸில் (-) சென்றதால், மைனஸ் பேலன்ஸ் மற்றும் வட்டி வீதம் பில் எகிறியது. ஒரு வழியாக அவருக்கு வேலை கிடைத்தது. இப்போதும் அவர் அந்த அட்டையின் முழுக்கடன் தொகைக்குமான வட்டி மற்றும் சேவைவரிகளை மட்டும்தான் மாதந்தோறும் கட்டிக்கொண்டுதான் வருகிறார். கடன் தொகையை அடைக்க முடியாத நிலை.
அவர் அன்றே, மொபைல் வாங்கும்முன் சற்று சிந்தித்திருந்தால்....
இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியதில்லை..... சரிதானே!!
No comments:
Post a Comment