நான் விலைவாசி உயர்வுக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றமே காரணம் என்று கூறியிருந்தேன்...
ஆனால், இப்பொழுது பெட்ரோலியப் பொருட்களின் விலை கணிசமாகக் (பெட்ரோல் ரூ10.) குறைந்து கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ஆகியும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்னும் ஏறுமுகமாகவே உள்ளது.
இதற்கு இன்னும் காரணம் புரியவில்லை. பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து அனைத்துத் தரப்பினரும் போராடினார்களே... இப்பொழுது அதன் விளைவாக ஏறிய மற்ற பொருடகளின் விலையேற்றத்தைக் குறைக்க யாரும் முன்வராதது ஏன்?

பெட்ரோல் விலை ஏறியபொழுது ரூ2 இல் இருந்து ரூ3. ஆகி ரூ. 4 ஆன டீ விலை இன்னமும் ரூ 4 இல் நிலை கொண்டுள்ளதே அதன் மர்மம் என்ன??
அவர்களுக்கு விலையேற்ற உதவிய பெட்ரோல் விலை இன்று குறைந்துள்ள நிலையிலும் ஒருவரும் விலை குறைப்புக்கு முன்வராதது ஏன்?
நான் தினசரி டீ குடிக்கும் கடைக்காரரிடம் பெட்ரோல் விலை குறைந்து இன்னுமும் டீ ரூ.4 இல் இருந்து குறையவில்லையே என்று கேட்டதற்கு, நான் பெட்ரோலில் டீ போடவில்லையே என்று நக்கலாகக் கேட்டார். ஆனால் அன்று விலையேற்ற உதவிய பெட்ரோல் விலை இன்று விலை குறைக்க யாவருக்கும் உதவவில்லையா????
விலை குறைப்பால் எந்த உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் பலனடையவில்லையா???? நாடு இவ்வளவு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்த நிலையிலும், யாரும் விலை குறைப்பிற்கு முன்வராதது ஏன்???
இது மட்டுமல்ல இன்னமும் விடை தெரியாத நிறைய கேள்விகளால் (விலை ஏற்றத்தால்) பாதிக்கப்பட்ட அப்பாவி இந்தியர்களில் நானும் ஒருவன்....!!!
No comments:
Post a Comment